Sunday, 10 January 2016

"மனதிற்கு அமைதி தேட"


ஒரு நாள்  மாலை  பொழுது , ஒருவன்   தன்  இயந்திர  வாழ்க்கையை  முடித்து, மனதிற்கு  அமைதி  தேட கடற்கரையை  நாடி வருகிறான் .

அங்கே  இருந்த  அனைவரது  முகத்திலும்  சோர்வு .... பாவம்  தன்னை  போல்  அனைவரும்  அலுத்துபோய்  இருந்தனர் .

சரி , மன  அமைதி  தேடி  வந்தால் , ஏன்  அனைவரும் சோகம்  சூழ அமர்ந்திருந்தார்கள் ....?  

ஒரு  முதியவரிடம்  சென்று  கேட்ட  போது , தன்  குடும்பத்தில்  இன்று  நடந்த பிரச்சனை , நாளை  வரபோகும்  பிரச்சனை  எண்ணியே  தமது  சோகம்  என்றார் .

இதை  போன்ற  காரணம்  தான்  (நடந்த  , நடக்க  போகிற  பிரச்சனைகள் ), மற்ற  சிலர்  கூறியது ...

ஆனால் , அங்கு  விளையாடி  கொண்டு இருந்தவர்கள்  மட்டும்  மகிழ்ச்சியுடன்  இருந்தனர் .

சில  சமயங்களில் , மன  அமைதி என்பது  உடல்  சார்ந்து  இருக்கும்  என்பதில்  மட்டும்  அவனுக்கு  நம்பிக்கை   அதிகமானது.

"விளையாடும்  போது  மட்டும்  மனம்  மற்றவற்றை  சிந்திக்காது"
என்பதை  உணர்ந்த  அவன்  சற்று  தூரம் மெல்ல  ஓடினான் .....

No comments:

Post a Comment